schemes
மாத வருவாய் தரும் பொன்னான திட்டத்தில் இப்பவே சேருங்க… வயதான காலத்தில் உங்களுக்கு பாதுகாப்பு
இந்திய அஞ்சல் துறை பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அவற்றில் முதலீட்டுத் திட்டங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
பாதுகாப்புக்கு உத்தரவாதம் தருவதால் பெரும்பாலானோர் இங்கு தான் முதலீடு செய்து வருகின்றனர். அந்த வகையில் மாதா மாதம் வருவாய் வரும் ஒரு உன்னத திட்டம் ஒன்றை அஞ்சல் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுபற்றிய விவரம் என்னன்னு பார்க்கலாமா…
ஒரே ஒரு முறை முதலீடு செய்தால் போதும். மாதா மாதம் வருமானம் தருகிறது அஞ்சல் துறை. இது முதியோர்களுக்கு ஏற்ற பொன்னான திட்டம். இந்தத் திட்டத்தில் சேர குறைந்தபட்சமாக ரூ.1500 முதல் அதிகபட்சமாக ரூ.4.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம்.
தனிநபர் அல்லது கூட்டு சேமிப்புத் திட்டமாகவும் தொடங்க முடியும். கூட்டு சேமிப்புத் திட்டத்தில் ரூ.9 லட்சம் வரை முதலீடு செய்து கொள்ளலாம். இத்திட்டத்தின் முதிர்வு காலம் 5ஆண்டுகள்.
முதிர்வுகாலம் முடிந்தாலும் கூட இதை நீட்டிப்பு செய்து கொள்ளலாம். முதியோர்கள் வயதான காலத்தில் யாரையும் சார்ந்திருக்க வேண்டிய தேவையில்லை.
இந்தத் திட்டத்திற்கு வட்டி விகிதம் ஆண்டுக்கு 6.6 சதவீதம். இந்தத் திட்டத்தைத் துவங்கிய ஒரு மாதத்தில் இருந்தே உங்களுக்கு மாத வருவாய் அதாவது நீங்கள் கட்டிய பணத்திற்கான வட்டி கிடைத்துவிடும். இதற்கு கூட்டு வட்டி கிடையாது. தனி வட்டி மட்டுமே உண்டு.
இடையிலேயே கணக்கை முடித்துக் கொள்ள நினைத்தால் முதல் 3 ஆண்டுகள் வரை 2 சதவீதம் தொகை கழிக்கப்பட்டு மீதம் தரப்படும். 3 ஆண்டுகளுக்கு மேல் என்றால் ஒரு சதவீதத் தொகை கழிக்கப்படும். இந்தத் திட்டத்தில் சேர நீங்கள் அஞ்சலக சேமிப்பு கணக்கை வைத்திருக்க வேண்டும்.
காலாண்டுக்கு ஒரு முறை வட்டி விகிதம் மாறுபடும். ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.555 வட்டி கிடைக்கும். ரூ.2 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.1100 வட்டி கிடைக்கும். ரூ.3 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.1650 வட்டி கிடைக்கும்.
ரூ.4 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.2200 வட்டி கிடைக்கும். ரூ.4.5 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.2475 வட்டி கிடைக்கும். ரூ.9 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.4950 வட்டி கிடைக்கும்.
மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள அஞ்சலகக் கிளையை அணுகுங்கள்.
latest news
ஹெலன் கெல்லர் விருது முதல் பிங்க் ஆட்டோ வரை… அட்டகாசமான அறிவிப்பால் அசரடித்த தமிழக அரசு!
சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழக அரசு பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது. மாற்றுத்திறனாளிகள், பெண்கள் பாதுகாப்பு, குழந்தைகள் படிப்பு என பல நோக்கத்தில் யோசிக்கப்பட்டு இந்த அறிவிப்புகள் வெளியாகி இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிவுசார் குறைபாடு மற்றும் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட 1000 மாற்றுத்திறனாளிகள் குழந்தைகளுக்கு நவீன இயன்முறை உபகரணங்கள் வழங்கப்படும். பார்வை திறன் குறைந்த மாணவர்கள் தங்கி படிக்கும் தொழிற்பயிற்சி நிலைய யூனிபார்ம்களுக்கு ரூ.600 மானியமாக வழங்கப்படும்.
செவித்திறன் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு செயல்படும் 10 அரசு சிறப்பு பள்ளிகளில் கியூஆர் கோட் மூலம் அறிந்துக்கொள்ள பாடத்திட்டம் உருவாக்கப்படும். மாற்றுத்திறனாளிகள் ஒரே நேரத்தில் 200 பேர் தங்கி படிக்க விடுதி வசதியும், சிறப்பு வகுப்புகளும் நடத்தப்படும். சிறந்த மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு மாற்றுத்திறனாளிகள் நல ஆர்வலர் ஹெலன் கெல்லர் விருது வழங்கப்படும்.
தனியாரால் நடத்தப்படும் முதியோர் இல்லங்கள் மற்றும் பணிபுரியும் பெண்கள் விடுதி உரிமம் வாங்க சிம்பிள் கவர்னன்ஸ் திட்டம் மூலம் நடைமுறை எளிதாக்கப்படும். அங்கன்வாடி பணியாளர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம்கள் நடத்தப்படும். 40 லட்சம் மதிப்பீட்டில் முக்கிய சுற்றுலா தளங்களில் தங்கும் விடுதிகள் அமைக்கப்படும்.
2 கோடி மானியத்தில் 200 பெண்களுக்கு பிங்க் ஆட்டோ வழங்கப்படும். பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய ஜிபிஎஸ் பொருத்தப்பட்டு இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
latest news
கல்யாணம் பண்ணினா இந்த பென்ஷன் உங்களுக்குதான்..90ஸ் கிட்ஸ்லாம் நோட் பண்ணிகோங்க..
இந்தியாவில் மத்திய அரசால் பல்வேறு நல திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் பெரும்பாலும் வயதான காலத்தில் பென்ஷன் தரும் திட்டமாகவே உள்ளன. இந்த வகை திட்டங்களில் இப்போது நாம் பார்க்கும் திட்டம்தான் Pradhan Mantri Sharm Yogi Man Dhan yojana என அழைக்கப்படும் ஒரு வகை திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலம் நாம் நமது 60 வயதிற்கு பின் பென்ஷனாக ரூ.3000 வரையிலும் பெற்று கொள்ளலாம்.
இந்த திட்டத்திற்கு நாம் திருமணமாகி இருத்தல் அவசியம். இதன் மூலம் நாம் மாதம் ரூ200 செலுத்தினால் ஏறக்குறைய ஆண்டிற்கு ரூ.72000 வரையிலும் நாம் பென்ஷனாக பெறலாம். இந்த திட்டமானது தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தினால் 2019 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. மேலும் திருமணமானவர்கள் தங்களின் வயதான காலத்தில் எந்தவித சிரமமும் இல்லாமல் பென்ஷன் பெற வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
மேலும் அமைப்புசாரா தொழிலாளர்களான வீட்டு வேலைகளை பார்ப்பவர்கள், தெருக்கடைகள் வைத்திருப்பவர்கள், அங்கன்வாடிகளில் பணிபுரிபவர்கள், மாதம் 15000க்கு கீழ் வருமானம் வாங்குபவர்கள், டிக்ஷா ஓட்டுனர்கள் போன்ற அமைப்புசாரா தொழிலாளர்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம். மேலும் இத்திட்டத்தின் கீழ் பயனடைபவர்கள் தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பென்ஷன் வாங்க தகுதி உடையவராக இருத்தல் கூடாது.
இத்திட்டத்தின்படி ஒவ்வொரு சந்தாதாரரும் தக்களின் 60 வயதிற்கு பின் ரூ.3000த்தினை மாதமாதம் பென்சஷனாக பெற்று கொள்ளலாம். ஒரு வேளை சந்தாதாரர் இறக்க நேரிட்டால் 50% தொகையானது அவரின் கணவர் அல்லது மனைவிக்கு அப்பணமானது பென்ஷனாக வந்து சேரும். இத்திட்டத்தினை அருகிலுள்ள பொது சேவை மைத்திற்கு தங்களுடைய ஆதார் மற்றும் வங்கி கணக்கு புத்தகத்தினை கொண்டு சென்று விண்ணப்பித்து கொள்ளலாம்.
job news
முதியவர்களுக்கான சிறப்பான நிலையான வைப்பு தொகை..கடைசி நாளை நீட்டித்த வங்கிகள்..எதெல்லாம்னு தெரிஞ்சிகனுமா?..
நிலையான வைப்பு தொகை(FD) என்பது அனைவருக்கும் தேவைப்படும் மிக சிறந்த திட்டம் ஆகும். இதில் நாம் செலுத்தும் தொகையானது அதன் முதிர்வு காலத்திற்கு பின் வட்டியுடன் சேர்ந்து நமக்கு திரும்ப வந்து சேரும். இதனை நாம் அனைத்து அரசு மற்றும் தனியார் வங்கிகளிலும் தபால் நிலையங்களிலும் தொடங்கி கொள்ளலாம். ஒவ்வொரு வங்கியும் மூத்த குடிமக்களுக்கான ஒவ்வொரு சிறப்பு வாய்ந்த FD திட்டத்தினை கொண்டுள்ளன. தற்போது சில வங்கிகள் தங்களது வங்கிகளில் இந்த கணக்கினை தொடங்குவதற்கான கடைசி தேதியை நீட்டித்துள்ளன. அது என்னென்ன வங்கிகள் என பார்க்கலாம்.
எஸ்.பி.ஐ:
WE CARE:
பாரத ஸ்டேட் வங்கி தனது வங்கியில் மூத்த குடிமக்களுக்காக WE CARE என்ற நிலையான வைப்பு தொகைக்கான திட்டத்தினை தொடங்கியது. இந்த திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு 7.6% வட்டியும் மற்றவர்களுக்கு 7.10% வட்டியும் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 5 முதல் 10 ஆண்டுகள். செப்டம்பர் 30, 2023 வரை இந்த திட்டத்தில் நாம் முதலீடு செய்து கொள்ளலாம்.
அம்ரித் கலாஷ்:
இதுவும் பாரத ஸ்டேட் வங்கியின் நிலையான வைப்பு திட்டத்தில் ஒன்றாகும். இதன் மூலம் சாதாரண மக்கள் 3% முதல் 7% வரையிலும் மூத்த குடிமக்கள் 3.5% முதல் 7.5% வரையிலும் வட்டியாக பெற்று கொள்ளலாம். இந்த திட்டத்தில் ஆகஸ்ட்,15 2023 வரை நாம் கணக்கினை தொடங்கி கொள்ளலாம்.
எச்.டி.எஃப்.சி வங்கி:
இந்த திட்டத்தினை நாம் 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் என்ற கால கணக்கில் தொடங்கி கொள்ளலாம். 400 நாட்கள் முதிர்வு காலமாக கொண்ட இந்த திட்டத்தில் நாம் வட்டியாக 7.75- வரை பெற்று கொள்ளலாம். இந்த திட்டத்தில் நாம் ஜுலை மாதம் 7ஆம் தேதி வரை தொடங்கி கொள்ளலாம்.
எனவே இந்த மாதிரியான பொன்னான திட்டத்தில் சேர்ந்து நமது பணத்தினை சேமிக்கலாம்.
govt update news
உங்கள் — கணக்கில் இருந்து முன்னதாகவே பணத்தை எடுக்க வேண்டுமா?..அப்போ இத படிங்க..
மக்களின் பணத்தை சேமுக்கும் எண்ணத்தில் இந்தியாவில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் உள்ளன. வருங்காலத்தில் நமது பணத்தேவையை பூர்த்தி செய்யவே இவ்வாறான சேமிப்பு திட்டங்கள் உள்ளன. அதில் ஒரு திட்டம்தான் PPF எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதி. இந்த திட்டத்தில் குறைந்தபட்சமாக ரூ.500ம் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரையிலும் முதலீடு செய்யலாம். நடப்பு ஆண்டில் இதற்கான வட்டியாக 7.1% கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் ஆகும். ஆனால் நாம் சில நிபந்தனைகளுடன் முதிர்வு காலத்திற்கு முன்பே இந்த கணக்கில் உள்ள பணத்தினை சில அவசர தேவைகளுக்காக எடுக்க முடியும்.
இந்திய குடிமகனாய் உள்ள எவர் வேண்டுமானலும் இந்த கணக்கினை அனைத்து அரசு மற்றும் தனியார் வங்கிகளிலும் தபால் நிலையங்களிலும் ஆரம்பித்து கொள்ளலாம். இதனை நாம் நமது குழந்தைகளுக்காக கூட தொடங்கலாம். ஆனால் அவர்களின் பெற்றோரின் கணக்கினை உபயோகப்படுத்தியே தொடங்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாம் நமது கணக்கினை தொடங்கி 7 ஆண்டுகள் ஆன பின் இந்த கணக்கில் இருந்து நாம் பணத்தினை எடுத்து கொள்ளலாம். ஆனால் நாம் முழுத்தொகையையும் எடுக்க இயலாது. இந்த கணக்கில் உள்ள மொத்த தொகையில் இருந்து 50% தொகையை மட்டுமே நாம் முன்னதாகவே எடுக்க முடியும்.
இந்த தொகையை எவ்வாறு எடுப்பது?
இந்த தொகையை நாம் எடுப்பதற்கு முதலில் வங்கியிலோ அல்லது தபால் நிலயங்களிலோ ஃபார்ம் சி எனப்படும் ஆவணத்தை வாங்க வேண்டும். பின் அந்த ஃபார்ம் சி(Form c)-யில் நமது கணக்கின் எண்ணையும் நம்க்கு எவ்வளவு தொகை வேண்டும் என்பதையும் பூர்த்தி செய்ய வேண்டும். இதனுடன் ரிவன்யூ ஸ்டாம்ப்(Revenue Stamp) இருப்பதும் அவசியம். இதனை நமது பாஸ்புக் உடன் சேர்த்து வங்கியில் சமர்பிக்க வேண்டும். இந்த செயல்முறை முடிந்தபின் நாம் கேட்ட தொகையானது நமது வங்கி கணக்கிற்கு வந்து சேரும். இந்த பி.பி.எஃப் கணக்கின் மிது நாம் கடன் கூட வாங்கலாம். ஆனால் அதற்கு நாம் கணக்கினை தொடங்கி 3 வருடங்கள் ஆகியிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
latest news
வங்கிகளில் லாக்கர் வைக்கும் ஐடியா இருக்கா?..ஒவ்வொரு வங்கியும் எவ்வளவு சார்ஜ் பன்றாங்கனு தெரியனுமா?..அப்போ இத பாருங்க..
லாக்கர் வசதி என்பது அனைத்து வங்கிகளிலும் நமது நகைகளை, பத்திரங்களை, பாண்டுகள் என அனத்தையும் பத்திரமாக வைப்பதற்கு என கொண்டு வரப்பட்ட ஒரு வசதி ஆகும். இதன் மூலம் நமது முக்கியமாக அனைத்து அசயா சொத்துகளையும் நாம் பாதுகாப்பாக வைத்து கொள்ள முடியும். இந்த லாக்கர்களின் வாடகை அதன் அளவு மற்றும் இருக்கும் நகரத்தை பொறுத்து மாறுபடும். இத்தகைய லாக்கர்களுக்கு எந்த வங்கி எவ்வளவு வசூலிக்கிறது என காணலாம்.
பாரத ஸ்டேட் வங்கி:
கிராமபுற/சிறிய நகரங்கள் | நகர்புற/மெட்ரோ | |
சிறிய லாக்கர் | ரூ.1500 | ரூ.2000 |
நடுத்தர லாக்கர் | ரூ.3000 | ரூ.4000 |
பெரிய லாக்கர் | ரூ.9000 | ரூ.12000 |
பஞ்சாப் நேஷனல் வங்கி:
கிராமபுற/சிறிய நகரங்கள் | நகர்புற/மெட்ரோ | |
சிறிய லாக்கர் | ரூ.1250 | ரூ.2000 |
நடுத்தர லாக்கர் | ரூ.2500 | ரூ.3500 |
பெரிய லாக்கர் | ரூ.3000 | ரூ.5500 |
எச்.டி.எஃப்.சி வங்கி:
கிராமபுற/சிறிய நகரங்கள் | நகர்புற | மெட்ரோ | |
சிறிய லாக்கர் | ரூ.1200 | ரூ.1650 | ரூ.2200 |
நடுத்தர லாக்கர் | ரூ.1550 | ரூ.3000 | ரூ.4000 |
பெரிய லாக்கர் | ரூ.4000 | ரூ.7000 | ரூ.10000 |
மிகபெரிய லாக்கர் | ரூ.11000 | ரூ.15000 | ரூ.20000 |
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி:
ஏறக்குறைய லாக்கர் வாடகை | |
சிறிய லாக்கர் | ரூ.1200-5000 |
நடுத்தர லாக்கர் | ரூ.2500-9000 |
பெரிய லாக்கர் | ரூ.4000- 15000 |
மிகபெரிய லாக்கர் | ரூ.10000-22000 |
கனரா வங்கி:
கிராமபுறங்கள் | சிறிய நகரங்கள் | மெட்ரோ | |
சிறிய லாக்கர் | ரூ1000 | ரூ.1500 | ரூ.2000 |
நடுத்தர லாக்கர் | ரூ.2000 | ரூ.3000 | ரூ.4000 |
பெரிய லாக்கர் | ரூ.4000 | ரூ.6000 | ரூ.7000 |
மிகபெரிய லாக்கர் | ரூ.6000 | ரூ.8000 | ரூ.10000 |
எனவே இதுபோன்ற வங்கிகளில் நமது நகைகளையோ அல்லது பிற சொத்து சம்பந்தமான பத்திரங்களையோ வைப்பதின் மூலம் நாம் நமது பொருட்களை பாதுகாக்கலாம்.
-
Cricket1 day ago
டோனி விளையாட நினைக்கும் வரை ரூல்ஸ் மாறிட்டே இருக்கும்.. முகமது கைஃப்
-
latest news1 day ago
ஓட்டுநர் உரிமத்தில் மாற்றங்கள்.. ஆன்லைனிலேயே செய்யலாம்..
-
latest news20 hours ago
2026ல் பாஜக ஆட்சி…திமுகவின் ஊழல்கள் வெளிவரும்…எச்.ராஜா உறுதி…
-
Cricket1 day ago
மகளிர் டி20 உலகக் கோப்பை.. 10 ஆண்டுகளில் முதல் வெற்றி.. சம்பவம் செய்த வங்கதேசம்
-
latest news19 hours ago
போஸ் கொடுத்த திருடன்…காட்டிக் கொடுத்த கேமரா…
-
latest news22 hours ago
வங்கக்கடலில் வளி மண்டல சுழற்சி…வச்சு செய்யப்போகுதா மழை?…
-
Cricket1 day ago
ஹர்பஜன் சொன்னது பொய்.. உண்மையை உடைத்த CSK பிசியோ
-
latest news21 hours ago
முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள்…கோலகலமான துவகத்திற்கு தயாராகும் வீரர்கள்…