automobile
மானியம் பெற ஏமாற்றுவீங்களா? 7 நிறுவனங்களை தட்டித்தூக்கி ரூ. 500 கோடி வசூலிக்க அரசு நடவடிக்கை!
மத்திய அரசு ஃபேம் 2 திட்டத்திற்கான விதிமுறைகளை முன்பை விட தற்போது சற்றே கட்டுப்படுத்தி இருக்கிறது. எலெக்ட்ரிக் வாகன உறப்த்தியாளர்கள் அரசுக்கு பொய் தகவல்களை வழங்கி எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், குற்றச்சாட்டு குறித்து அரசு சார்பில் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில் எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும் ஏழு நிறுவனங்கள் தவறான தகவல்களை கொடுத்து மானியம் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த நிறுவனங்களிடம் இருந்து ரூ. 500 கோடி மதிப்பிலான மானியத்தை மீட்க அரசு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு வழங்கப்பட்டு வரும் மானியத்தை முவுமையாக ரத்து செய்யவும் அரசு பரிசீலனை செய்து வருகிறது. தற்போதைய குற்றச்சாட்டை தொடர்ந்து ஹீரோ எலெக்ட்ரிக், ஒகினவா ஆட்டோடெக், ஆம்பியர் EV, ரெவோல்ட் மோட்டார்ஸ், பென்லிங் இந்தியா, லொஹியா ஆட்டோ மற்றும் AMO மொபிலிட்டி போன்ற நிறுவனங்களுக்கு அரசு நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக கூறப்படுகிறது.
மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் நிறுவனங்கள் தவறான தகவல்களை கொடுத்து ஃபேம் 2 திட்ட பலன்களை பெற்றதாக தெரிகிறது. ஃபேம் 2 திட்டத்தில் பயன்பெற எலெக்ட்ரிக் நிறுவனங்கள் தவறான தகவல்களை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தற்போதைய நடவடிக்கையை மத்திய தொழில்துறை அமைச்சகம் சார்பில் எடுக்கப்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு சார்பில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் அறிவிக்கப்பட்டு, பிரத்யேகமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்காக இதுவரை சுமார் ரூ. 1400-இல் இருந்து ரூ. 1500 கோடி வரையிலான தொகை மானியமாக வழங்கப்பட்டு இருக்கிறது.
இதுதவிர மானிய தொகைக்கு அனுமதி வழங்கப்பட்ட நிறுவனங்களுக்கு பணம் செலுத்துவதற்கான வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வவருகின்றன. எலெர்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கு மானியம் பெற அரசாங்கத்திற்கு 10 லட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்கள் சமர்பிக்கப்பட்டு உள்ளன. இவற்றில் 4 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு விட்டன.
இந்தியாவில் ஃபேம் 2 திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட பலன்களை குறைக்கும் நடவடிக்கையை மத்திய அரசு சமீபத்தில் தான் மேற்கொண்டது. புதிய விதிகளின் கீழ் ஒரு கிலோவாட் ஹவர் பேட்டரிக்கான மானிய தொகை ரூ. 10 ஆயிரமாக குறைக்கப்பட்டது. மேலும் எலெக்ட்ரிக் வாகனத்தின் ஒட்டுமொத்த மதிப்பில் 15 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டது.
மத்திய அரசின் சமீபத்திய நடவடிக்கை காரணமாக ஒலா எலெக்ட்ரிக், ஏத்தர் எனர்ஜி, டிவிஎஸ் மற்றும் விடா போன்ற பிராண்டுகள் தங்களது எலெக்ட்ரிக் வாகனங்கள் விலையை கணிசமாக அதிகரித்தன.
automobile
மீண்டு(ம்) வரும் ஃபோர்ட் நிறுவனம்?…விரைவில் வெளியாக உள்ள முறையான அறிவிப்பு?…
சென்னையில் தனது நிறுவன கார் உற்பத்தியை நடத்தி வந்த ஃபோர்ட் நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு முதல் இந்தியாவில் தனது செயல்பாடுகளை நிறுத்திக் கொண்டது. தற்போது புதிய வகையான கார்கள் உற்பத்தியில் கவனம் செலுத்த தனது பனிகளை மீண்டும் சென்னையில் துவக்க ஃபோர்ட் நிறுவனம் முனைப்பு காட்டுவதாகவும், இது குறித்த முறையான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளாதாக சொல்லப்படுகிறது.
இந்தியாவில் ஃபோர்ட் நிறுவனம் தனது கார் உற்பத்தியை குஜராத் சனந்த், சென்னை மறைமலைநகர் பகுதிகளில் தொழிற்சாலைகள் அமைத்து நடத்தி வந்தது. இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு தனது இந்தியாவில் தனது செயல்பாடுகளை முழுமையாக நிறுத்திக்கொண்டது அந்நிறுவனம்.
அமெரிக்க சுற்றுப் பயணத்தின் போது தமிழக முதல்வர் ஸ்டாலின் ஃபோர்ட் நிறுவனம் தங்களது பணிகளை சென்னையில் மீன்டும் துவங்க வேண்டும் என ஃபோர்ட் நிறுவன அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்திருந்தார்.
ஃபோர்ட் நிறுவனம் உடனான 30ஆண்டு கால கூட்டனியை மீண்டும் புதுப்பிக்கும் வழிகள் குறித்து ஆராயப்பட்டதாக ஸ்டாலின் சொல்லியிருந்தார்.
இப்படிப்பட்ட நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலினின் கோரிக்கையை சென்னையில் தனது உற்பத்தியை மீண்டும் துவங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய சந்தையில் கவனம் செலுத்தும் முயற்சியில் அந்நிறுவனம் ஈடுபட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் மீண்டும் ஆலையை அமைக்க மாநில அரசிடம் கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாக ஃபோர்ட் நிறுவனம் அறிவித்துள்ள நிலையில், மின்சார வாகன விற்பனையுடன் இந்தியாவில் நுழைவதற்கான முயற்சிகளை அந்நிறுவனம் தொடங்கியுள்ளது. இதனால் முன்போல சென்னை ஃபோர்ட் உற்பத்தி ஆலையில் பணியாற்ற வாய்ப்புகள் உண்டாகும் நிலை உருவாகியுள்ளது.
automobile
வண்டி வேணும்ன்னா மூனு மாசம் வெயிட் பண்ணுங்க!…பின்ன வோல்டு நம்பர் ஒன்னுன்னா சும்மாவா?…
உலகம் முழுவதும் உள்ள வாகனங்கள் பொதுவாக பெட்ரோல், டீசலாலே நிரப்பப்பட்டு இயக்கப்படுகிறது. அதன் பின்னர் கேஸ்கள் மூலம் இவை இயக்கப்பட்டது. இரு சக்கர வாகனத்திற்கு பெட்ரோலே எரி பொருளாக நிரப்பபட்டு அதன் மூலமே இயக்கப்படுகிறது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்க்கான தேவைகள் அதிகரிக்கத் துவங்கியது. இதிலிருந்து எடுக்கப்படும் எரிபொருட்களே மனிதர்களின் அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சர்வதேச அளவில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான தேவைகள் தொடர்ந்து அதிகரித்து வரத்துவங்கியதால், சார்ஜ் செய்து பேட்டரிகள் மூலம் இயங்கக்கூடிய வாகனங்கள் சந்தையில் அறிமுகமானது. இவற்றிற்கு அதிக வரவேற்பு உலக அளவில் கிடைத்து. இப்போது பஸ், கார், உள்பட சரக்குகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் கூட பேட்டரிகள் மூலமாக இயக்கப்பட்டு வருகிறது.
இந்த வாகனப் போக்குவரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது இந்தியாவின் டூவிலர் தயாரிப்பு முன்னணி நிறுவனமான பஜாஜ்.
சிஎன்ஜி (CNG) கேஸின் மூலம் இயக்கப்படக் கூடிய முதல் டூவீலர்களை உலகிற்கு முதன் முதலாக அறிமுகப்படுத்தியுள்ளது இந்தியாவின் பஜாஜ் நிறுவனம். ஃபிரீடம் என்ற பெயரில் 125 சிசி (CC)இஞ்சின், என்ஜிஓ 4 டிரம் (NGO 4 Drum), என்ஜிஓ 4 டிரம் எல்ஈடி(NGO 4 Drum LED), என்ஜிஓ டிஸ்க் எல்ஈடி டிஸ்க் எல்ஈடி (NGO 4 Disc LED) என்ற மூன்று மாடல்களில் விற்பனையாகி வருகிறது பஜாஜின் ஃபிரீடம்.
மும்பை, புனே, குஜராத் உள்ளிட்ட சில நகரங்களில் மட்டுமே கிடைத்து வரும் இந்த பைக்குகளை சொந்தமாக்க மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டும் என பஜாஜ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
automobile
என்ன லைசன்ஸ் இல்லாமலே பைக் ஓட்டலாமா?..இது என்ன புதுசா இருக்கே…
இந்தியாவில் நடக்க சாத்தியமே இல்லை என்று நினைத்த MotoGP, இந்த ஆண்டு MotoGP பாரத் என்ற பெயரில் இந்தியாவில் நடைபெறவிருப்பது இந்திய வாகன பிரியர்களுக்கு மிகுந்த சந்தோஷத்தை தந்துள்ளது. MotoGP பாரத் தொடர் உத்திரபிரதேசத்தின், நொய்டாவில் உள்ள Buddh International Circuit- ஆல் நடத்தப்படுகிறது.
MotoGP பாரத் பற்றிய விளம்பரங்கள் நாடு முழுவதும் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான வரவேற்புகளும் அதிகரித்தவண்ணமாக உள்ளது. இந்தியாவிலும் Racing culture பல முன்னேற்றம் கண்டுள்ளது. பலதரபட்ட மக்களிடையில் மோட்டார் ரேசிங்கின் ஆர்வம் அதிகரித்தும் காணப்படுகிறது.
மக்களின் ஆர்வத்தை புரிந்துகொண்டு அதை திறம்பட செயல்படுத்த மற்றும் தரமான வீரர்களை உருவாக்குவதையும் கருத்தில் கொண்டு, நமது கோயம்புத்தூரை சேர்ந்த CRA Motorsports, Atom GP1 race bike- ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
Atom GP1 பைக்கானது 10 முதல் 17 வயதான ரேசிங்கில் ஆர்வமுள்ளவர்களுக்கானது. இந்த பைக்கானது பைக் வகைகளில் ‘mini GP motorcycle kit’ என்கிற புது வகையை உருவாக்கியுள்ளது. Atom GP1 பைக்கில் 5-ஸ்பீடு, 159.3சிசி சிங்கில் சிலிண்டர் பொறுத்தப்பட்டுள்ளது, 2-வால்வு கார்புரேட்டட் இஞ்ஜின் ஆகும். இது 15bhp power,13.85Nm torque வெளிப்படுத்தும் திறன்கொண்டது. இந்த பைக்கில் USD front fork முன் பகுதியிலும், பின்பகுதிக்கு Mono shock absorber-ம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
12அங்குல அலாய் வீல்களை கொண்ட இந்த பைக்கில் TVS Remora tyre பொருத்தப்பட்டுள்ளது. முன்சக்கரத்தில் டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் டிரம் பிரேக்கும் இடம்பெற்றுள்ளது.என்னடா சின்ன பிள்ளைங்க லைசன்ஸ் இல்லாம பைக் ஓட்டமுடியுமானு நினைக்காதீங்க.
இந்த பைக் ரோட்டில் ஓட்டுவதற்கு அல்ல. இது பயிற்சி மற்றும் ரேசிங்கிற்காக பயிற்சி தளங்களில் மட்டுமே உபயோகப்படுத்த முடியும். சிறுவயதிலிருந்தே moto racing பயிற்சி அளிப்பதால் எதிர்காலத்தில் தரமான வீரர்களை MotoGP-யிலும் பார்க்க முடியும். ஆனால் இந்த பைக்கின் விலை ரூ.2.75லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
automobile
ZS எலெக்ட்ரிக் காரில் இப்படியொரு வசதியா? எம்ஜி-க்கு தாராள மனசு தான்!
எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் தனது ZS EV எஸ்.யு.வி.-இன் புதிய எக்ஸ்-க்ளுசிவ் ப்ரோ வெர்ஷனை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய வெர்ஷனில் ADAS (அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம்) ஃபுல் சூட் அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. புதிய எம்ஜி ZS EV மாடலின் விலை ரூ. 27 லட்சத்து 90 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய எக்ஸ்-க்ளூசிவ் ப்ரோ வெர்ஷனின் விலை ஸ்டான்டர்டு எக்ஸ்-க்ளுசிவ் வெர்ஷனை விட ரூ. 59 ஆயிரம் வரை விலை அதிகம் ஆகும். அதிக விலைக்கு ஏற்ப புதிய வெர்ஷனில் பல்வேறு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. அதன்படி புதிய வெர்ஷனில், பெட்ரோல் என்ஜின் கொண்ட ஆஸ்டர் எஸ்.யு.வி.-க்கு இணையான அம்சங்கள் உள்ளன.
என்னென்ன மாற்றங்கள் :
இதுவரை எம்ஜி ZS EV மாடலில் பிலைன்ட் ஸ்பாட் டிடெக்ஷன், லேன் சேன்ஜ் அசிஸ்ட், ரியர் கிராஸ்-டிராஃபிக் அலர்ட் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருந்தது. தற்போது புதிய வெர்ஷனில் டிராஃபிக் ஜாம் அசிஸ்ட், ஃபார்வேர்டு கொலிஷன் வார்னிங், ஆட்டோனோமஸ் எமர்ஜன்சி பிரேக்கிங், லேன் கீப் அசிஸ்ட், லேன் டிபாச்சர் வார்னிங், ஸ்பீடு அசிஸ்ட் சிஸ்டம்கள், அடாப்டிவ் குரூயிஸ் கன்ட்ரோல் போன்ற வசதிகள் உள்ளன.
இதில் குறிப்பிடத்தக்க அம்சம் அசிஸ்டிவ் சிஸ்டம்களின் சென்சிடிவிட்டியை மேனுவல் முறையில் செட் செய்து கொள்ளும் வசதி வழங்கப்பட்டு இருப்பது தான். அதன்படி சென்சிடிவிட்டியை லோ, மீடியம் மற்றும் ஹை என மூன்று நிலைகளில் அட்ஜஸ்ட் செய்ய முடியும். இந்த சிஸ்டம் ஹேப்டிக், ஆடியோ மற்றும் விஷூவல் என மூன்று லெவல்களில் எச்சரிக்கை செய்யும்.
பாதுகாப்பு அம்சங்கள் :
இவைதவிர எம்ஜி ZS EV மாடலின் இதர அம்சங்களில் வெறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த மாடலில் மற்ற பாதுகாப்பு உபகரணங்களான ஆறு ஏர்பேக், இ.பி.டி. கொண்ட ஏ.பி.எஸ்., எலெக்டிரானிக் ஸ்டேபிலிட்டி கன்ட்ரோல், 360 டிகிரி கேமரா, ஹில் டிசென்ட் கன்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் பானரோமிக் சன்ரூஃப், 10.1 இன்ச் டச் ஸ்கிரீன் சிஸ்டம், வயர்லெஸ் போன் சார்ஜிங், 7 இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, கனெக்டெட் கார் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு உள்ளது.
மெக்கானிக்கல் மாற்றங்கள் இல்லை :
எம்ஜி ZS EV மாடலில் 50.3 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 461 கிலோமீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும். அன்றாட பயன்பாடுகளின் போது, போக்குவரத்து நெரிசல் மற்றும் இதர விஷயங்கள் காரணமாக ரேன்ஜ்-இல் மாற்றங்கள் ஏற்படலாம்.
புதிய ZS EV வெர்ஷனிலும் முன்புற ஆக்சிலில் எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டு இருக்கிறது. இது 176 ஹெச்.பி. பவர் மற்றும் 280 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 8.5 நொடிகளில் எட்டிவிடும்.
இதன் விலை ரூ. 23 லட்சத்து 38 ஆயிரம் என்று துவங்கி அதிகபட்சம் ரூ. 27 லட்சத்து 90 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் எம்ஜி ZS EV மாடல் பி.ஒய்.டி. அட்டோ 3 மற்றும் ஹூண்டாய் கோனா EV போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
automobile
28 கிமீ மைலேஜ்.. டாப் டக்கர் லுக்.. Fronx CNG வாங்க வேறென்ன வேண்டும்?
மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் தனது Fronx காரின் CNG வேரியண்டை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய மாருதி Fronx CNG வேரியண்ட் விலை ரூ. 8 லட்சத்து 41 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது மாருதி சுசுகி Fronx மாடலின் பெட்ரோல் வெர்ஷன்களை விட ரூ. 95 ஆயிரம் வரை அதிகம் ஆகும்.
புதிய CNG வெர்ஷன் சிக்மா மற்றும் டெல்டா என்று இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. மாருதி சுசுகி Fronx CNG வெர்ஷனை பயனர்கள் சந்தா முறையிலும் வாங்கிக் கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. இதற்கு மாதம் ரூ. 23 ஆயிரத்து 248 செலுத்த வேண்டும்.
மாருதியின் CNG மாடல்கள் :
புதிய வெர்ஷனை சேர்க்கும் பட்சத்தில் மாருதி சுசுகி நிறுவனம் மொத்தத்தில் 15 CNG மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இதில் ஆல்டோ, ஆல்டோ K10, பிரெஸ்ஸா, செலரியோ, டிசையர், எர்டிகா, ஈகோ, ஸ்விஃப்ட், எஸ் பிரெஸ்ஸோ, வேகன் ஆர் உள்ளிட்டவை மாருதி சுசுகி அரினா பிரிவில் கிடைக்கும் CNG மாடல்கள் ஆகும்.
நெக்சா பிரான்டிங்கில் புதிய Fronx தவிர கிரான்ட் விட்டாரா, XL6, பலேனோ போன்ற மாடல்களில் CNG கிட் ஆப்ஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.
என்ஜின் மற்றும் மைலேஜ் விவரங்கள் :
மாருதி சுசுகி Fronx CNG வெர்ஷனில் 1.2 லிட்டர் K-சீரிஸ், டூயல் ஜெட், டூயல் VVT பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 76 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 98.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. புதிய CNG கிட் மூலம், இந்த கார் லிட்டருக்கு 28.51 கிலோமீட்டர் வரை மைலேஜ் வழங்கும் என்று மாருதி சுசுகி தெரிவித்து இருக்கிறது.
இதர அம்சங்கள் :
புதிய மாருதி சுசுகி Fronx CNG வெர்ஷன்களில் டூயல் ஏர்பேக், இ.பி.டி.-யுடன் ஏ.பி.எஸ்., ரியர் பார்க்கிங் சென்சார்கள், 7 இன்ச் ஸ்மார்ட்பிளே ப்ரோ டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்டீரிங் மவுன்ட் செய்யப்பட்ட கன்ட்ரோல்கள், கீலெஸ் என்ட்ரி, ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், ஃபாௌக்ஸ் ஸ்கிட் பிலேட்கள் மற்றும் ஷார்க் ஃபின் ஆன்டெனா உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
விலை விவரங்கள் :
மாருதி சுசுகி Fronx CNG சிக்மா MT ரூ. 8 லட்சத்து 41 ஆயிரம்
மாருதி சுசுகி Fronx CNG டெல்டா MT ரூ. 9 லட்சத்து 27 ஆயிரம்
அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
-
Cricket1 day ago
டோனி விளையாட நினைக்கும் வரை ரூல்ஸ் மாறிட்டே இருக்கும்.. முகமது கைஃப்
-
latest news1 day ago
ஓட்டுநர் உரிமத்தில் மாற்றங்கள்.. ஆன்லைனிலேயே செய்யலாம்..
-
latest news20 hours ago
2026ல் பாஜக ஆட்சி…திமுகவின் ஊழல்கள் வெளிவரும்…எச்.ராஜா உறுதி…
-
Cricket1 day ago
மகளிர் டி20 உலகக் கோப்பை.. 10 ஆண்டுகளில் முதல் வெற்றி.. சம்பவம் செய்த வங்கதேசம்
-
latest news19 hours ago
போஸ் கொடுத்த திருடன்…காட்டிக் கொடுத்த கேமரா…
-
latest news22 hours ago
வங்கக்கடலில் வளி மண்டல சுழற்சி…வச்சு செய்யப்போகுதா மழை?…
-
Cricket1 day ago
ஹர்பஜன் சொன்னது பொய்.. உண்மையை உடைத்த CSK பிசியோ
-
latest news21 hours ago
முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள்…கோலகலமான துவகத்திற்கு தயாராகும் வீரர்கள்…