india
குழந்தைகளை படிக்க வைக்க கிட்னியை விற்ற தந்தை… கடைசியில் நடந்தது தான் பெரிய கொடுமை…
தன்னுடைய குழந்தைகளுக்கு சிறப்பான கல்வியை கொடுக்க நினைத்த தந்தை ஒருவர் தன்னுடைய கிட்னியை விற்கலாம் என முடிவெடுத்து இருக்கிறார். ஆனால் அவரின் அந்த முடிவு அவருக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்த அதிர்ச்சி நிகழ்வு நடந்திருக்கிறது.
ஆந்திராவை சேர்ந்த 31 வயதான ஆட்டோ ஓட்டுநர் மதுபாபு கர்லபதி. இவரின் குறைந்த வருமானம் அவரின் குடும்ப செலவிற்கே பெரிய பிரச்சினையாக இருந்திருக்கிறது. இருந்தும் கடன் வாங்கியும் தன்னுடைய குழந்தைகளை தொடர்ந்து படிக்க வைத்து வந்திருக்கிறார்.
இந்நிலையில், பேஸ்புக்கில் கிட்னி விற்பதற்கு 30 லட்சம் என்ற விளம்பரத்தை பார்த்து இருக்கிறார். இதனை அடுத்து தன்னுடைய கிட்னியை விற்க இவர் முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து விஜயவாடாவை சேர்ந்த பாட்ஷா என்ற ஏஜென்டை சந்தித்து தன்னுடைய கிட்னியை விற்க சம்மதம் கொடுத்திருக்கிறார்.
இருந்தும் மதுபாபு பாட்ஷாவின் மீது தொடர்ந்து சந்தேகத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. அவரை சமாதானம் செய்வதற்காக இன்னொரு பெண்ணை வைத்து தானும் கிட்னி விற்றதாகவும் எனக்கு சரியாக பணம் வந்து விட்டதாகவும் பேச வைத்து நம்ப வைத்து இருக்கிறார்.
இதை எடுத்து சில நாட்களிலேயே கிட்னி தேவைப்படுவதாக கூறி மதுபாபுவை விஜயவாடாவில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்து ஆபரேஷன் செய்ய முடிவு எடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது. கிட்னி பெற இருப்பவர் குடும்பத்தையும் மதுபாபுவிடம் பேச வைத்துள்ளனர். ஆபிரேஷன் முடிந்த பின்னர் ஒரே தவணையில் கொடுத்துவிடுவதாக கூறப்பட்டுள்ளது.
மதுபாபுவும் நம்பிக்கையாக ஆபிரேஷன் செய்து கொண்டு இருக்கிறார். ஆனால் அவருக்கு 50 ஆயிரத்தினை கொடுத்து 30 லட்சத்தினை ஏமாற்றி இருக்கின்றனர். இதனால் அதிர்ச்சியான மதுபாபு இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அப்போது பேசியவர், எனக்கு கடன் இருப்பது தெரிந்து என்னை ஏமாற்றி இருக்கின்றனர். கிட்னி விற்ற பணத்தை வைத்து என்னுடைய குழந்தைகளை படிக்க வைக்கலாம் என நினைத்திருந்தேன். இதனால்தான் நான் அதற்கு ஒப்புக்கொண்டேன். ஆனால் இப்பொழுது ஏமாற்றப்பட்டு இருக்கிறேன் எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.
சொந்தங்களுக்குள்ளே மட்டுமே கிட்னி தானம் செய்ய முடியும் என்பதால் மதுபாபு மற்றும் கிட்னி பெற்றவர் இடையே போலியான ஆவணம் மூலம் உறவு உருவாக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது. இதை எடுத்து விசாரணையை காவல்துறை முடக்கி விட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
Cricket
இதை செய்ய மும்பை அணிக்கு இருபத்தி ஏழு ஆண்டுகளா?…திருப்புமுனை தந்த தொடர்…
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இரானி கோப்பை இறுதிப் போட்டி நடந்தது. இந்த போட்டியில் மும்பை அணியும், ரெஸ்ட் ஆஃப் இந்திய அணியும் மோதியது. மும்பை அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன சர்பாரஸ் கான் அதிரடியாக ஆடி இரட்டை சதமடித்தார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரஹானே தொன்னூற்றி ஏழு ரன்களை எடுத்திருந்தார். அதிரடியாக ஆடிய சர்பாரஸ் கான் இருனூற்றி இருபத்தி இரண்டு ரன்கள் ஆட்டமிழக்காமல் இருந்தார் முதல் இன்னிங்ஸில்.
ரெஸ்ட் ஆஃப் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். யாஷ் தயாள், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். தனது முதல் இன்னிங்ஸின் பேட்டிங்கை துவங்கிய ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி நானூற்றி பதினாறு ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
அந்த அணியின் வீரர் அபிமன்யு ஈஸ்வர் அதிராடியாக ஆடி நூற்றி தொன்னூற்றி ஓரு ரன்களை குவித்தார். ஒன்பது ரன் களில் தனது இரட்டை சத வாய்ப்பினை தவற விட்டார். துரூவ் ஜுரேல் தொன்னூற்றி மூன்று ரன்களை எடுத்திருந்தார்.
மும்பை தரப்பில் ஷாம்ஸ் முலானி, தனுஷ் கோடியன் ஆகியோர் மூன்று விக்கெட்டுகளை எடுத்திருந்தனர். ஐந்தாவது மற்றும் கடைசி நாளில் மும்பை அணி எட்டு விக்கெட்டுகளை இழந்து முன்னூற்றி இருபத்தி ஒன்பது ரன்களை எடுத்தது.
போட்டி டிராவானது இதனையடுத்து முதல் இன்னிங்ஸில் அதிக ரன் களை எடுத்த மும்பை அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இருபத்தி ஏழு ஆண்டுகளுக்கு பிறகு மும்பை அணி இரானி கோப்பையை வென்றுள்ளது. இந்த இறுதிப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இரட்டை சதமடித்த சர்பாரஸ் கான் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
Cricket
வாகை சூடப்போகிறதா?…வாங்கிக் கட்டப்போகுதா?வங்கதேசம்…ஆறாம் தேதி துவங்க உள்ளது அதிரடி…
இந்தியாவுடனான இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் கொண்ட போட்டி தொடர்களில் விளையாட இந்தியாவில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளது வங்கதேச ஆடவர் கிரிக்கெட் அணி. பாகிஸ்தானுடனான தொடரில் வெற்றி பெற்று, புத்துணர்வுடன் இந்தியாவிற்கு வந்தது அந்த அணி. ஆனால் டெஸ்ட் தொடரில் இந்தியர்களின் திறமைக்கு ஈடுகொடுக்க முடியாமல் பரிதாபமாக தோற்று தொடரை இழந்தது.
முதல் டெஸ்ட் போட்டியின் ஆரம்ப நாளில் மட்டுமே சீறிப்பாய்ந்தது அந்த அணி. அதன் பின்னர் ஓரு நாள் கூட இந்திய அணிக்கு இணையான ஆட்டத்தை அவர்களால் வெளிப்படுத்த முடியவில்லை. இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தோல்வியடைந்தது அந்த அணி.
ஆஸ்திரேலியா,தென்-ஆப்பிரிக்கா,நியூசிலாந்து,இலங்கை அணிகளுடன் டெஸ்ட் போட்டிகளில் ஒப்பிட்டுப் பார்த்தால் கத்துக்குட்டி அணியாகவே பார்க்கப்படுகிறது இந்த அணி. ஆனால் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் கதையே வேறுதான், இது சிறிது அபாயகரமான அணியாகவே பார்க்கப்படுகிறது.
இருபது ஓவர் போட்டிகளில் தங்களது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் முக்கிய வீரர்கள் இந்தியாவிற்கு எதிரான இருபது ஓவர் போட்டி தொடரில் விளையாட உள்ளனர்.
இதற்கு முன்னர் நடந்த போட்டிகளில் பல நேரங்களில் இந்திய அணிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதானல் டெஸ்ட் தொடரை விட இந்த இருபது ஓவர் போட்டி தொடர் விறுவிறுப்பானதாக இருக்கும் என்பதில் எந்த விதமான மாற்றுக் கருத்தும் இருந்து விடாது. ஆனால் இந்திய அணி இப்போது இருபது ஓவர் போட்டிகளின் உலக சாம்பியன் என்பதாலும், சொந்த மண்ணில் போட்டி நடைபெறுவதாலும் இம்முறை இது வங்கதேசத்திற்கு அதிகமான சவால்களை கொடுக்கும் என்பது ஒரு புறம் ஏற்புடைய ஒன்றாகவே இருக்கிறது.
இந்த இரு அணிகளுக்கு இடையேயான முதல் இருபது ஓவர் போட்டி ஆறாம் தேதி குவாலியரில் வைத்து நடைபெற உள்ளது. முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகள் டில்லி, ஹைதராபாத்தில் வைத்து நடைபெற உள்ளது.
india
மகாத்மா காந்தி பிறந்த நாள்…பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் மரியாதை…
இந்திய நாடு சுதந்திரம் அடைவதில் முக்கிய பங்கு வகித்தவர் காந்தியடிகள். இவரது தியாகத்தை நினைவு கூறும் விதமாக “மகாத்மா” என அழைக்கபடுகிறார். தேசப்பிதா காந்தியடிகளின் அஹிம்சை கொள்கையின் மூலமாக இந்திய நாடு பிரிட்டீஷ் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றது.
மகாத்மா காந்தியடிகளின் பிறந்த தினம் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. மகாத்மா காந்தியடிகளின் நினைவிடம் அமைந்துள்ள ராஜ்காட்டில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் அவருக்கு தங்களது மரியாதையை செலுத்தி வருகின்றனர். இன்று காலை முதலே அவரது நினைவிடம் அமைந்துள்ள ராஜ்காட்டிற்கு சென்று தலைவர்கள் பலரும் தங்களது மரியாதையை மலர் தூவி செய்து வருகின்றனர். நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர் தூவு மரியாதையை செலுத்தினார்.
டெல்லி முதல்வர் அதிஷி, மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா ஆகியோரும் மகாத்மாவின் நினைவிடத்தில் மலர் தூவி தங்களது மரியாதையை செலுத்தினர்.
தமிழக அரசின் சார்பில் சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் உள்ள காந்தியின் சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதன் அருகே மகாத்மாவின் உருவப்படமும் வைக்கப்பட்டிருந்தது. தமிழக முதல்வர் ஸ்டாலின் அங்கு சென்று காந்தியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் அப்போது உடனிருந்தார்.
சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் உள்ள மகாத்மாவின் உருவப்படத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார். மத்திய அமைச்சர் எல்.முருகனும் ஆளுநருடன் சென்று மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தினார்.
Cricket
ரேஸில் வென்ற ரோஹித் சர்மா!…சூப்பர் ஆக்கி காட்டுவாரா சூர்யா?…
இரண்டரை நாளில் வங்கதேசத்தை வென்று டெஸ்ட் போட்டிகளில் பிரம்மிக்கத் தக்க வெற்றியை பெற்றுள்ளது இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி. கான்பூரில் துவங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் போதிய வெளிச்சம் இல்லாததன் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது. இரண்டாவது மற்றும் மூன்றாவது நாள் ஆட்டம் முழுமையாக கைவிடப்பட்ட நிலையில் நான்காம், ஐந்தாம் நாட்களில் அசத்தலான ஆட்டத்தினை வெளிப்படுத்தியது இந்திய அணி.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்வதை உறுதிபடுத்துவதை மனதில் வைத்துக் கொண்டு இந்திய வீரர்கள் அதிரடியை காட்டினர். இருபது ஓவர் போட்டியின் அனுகுமுறையை டெஸ்ட் போட்டியில் காட்டினர் ரோஹித் சர்மா தலைமையிலான வீரர்கள்.
இலங்கை மண்ணில் ஒரு நாள் தொடரில் சமீபத்தில் அடி வாங்கி வந்த இந்திய அணி பங்களாதேஷை பதம் பார்த்தது தனது சொந்த மண்ணில்.
இந்த இரு அணிகளுக்கு இடையேயான மூன்று இருபது ஒவர் போட்டி தொடர் வருகிற ஆறாம் தேதி துவங்க உள்ளது.
முதல் போட்டி குவாலியரிலும், இரண்டாவது போட்டி ஒன்பதாம் தேதி டில்லியிலும், மூன்றாவது போட்டி ஹைதராபாத்தில் பன்னிரரெண்டாம் தேதியும் நடைபெற உள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையில் அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், ஹார்திக் பாண்டியா, ரியான் பராக், நிதிஸ் குமார் ரெட்டி, சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ரவிபிஷ்னய், வருன் சக்கரவர்த்தி, ஜித்தேஷ் சர்மா, அர்ஷ்தீப் சிங், ஹர்சித் ரானா, மயங்க்யாதவ் ஆகியோர் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் நடைபெற்ற இருபது ஓவர் தொடரை கைப்பற்றியது போல வங்கதேசத்தையும் வென்று காட்டுவாரா? கேப்டன் சூர்ய குமார் யாதவ் என்ற எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது. இருபது ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பையை இந்திய அணி கைப்பற்றிய பிறகு இந்திய மண்ணில் வைத்து நடைபெற உள்ள முதல் தொடர் இதுவே என்பதனாலும் இந்த தொடர் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது.
Cricket
டெஸ்ட் கிரிக்கெட்…இலக்கு எளியது….கோப்பை இந்தியாவுக்கு?…
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது வங்கதேச கிரிக்கெட் அணி. மூன்று இருபது ஓவர் போட்டி தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரினல் விளையாட இந்தியாவிற்கு வந்துள்ள வங்கதேச அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் வைத்து நடந்த இந்தப் போட்டியில் அசாத்திய திறமையை வெளிப்படுத்திய இந்திய அணி அசத்தலான வெற்றியை பெற்றது. இந்திய அணியின் ஆல்-ரவுண்டர்களான அஷ்வின் – ஜடேஜா இணை பேட்டிங் மற்றும் பவுலிங்கில் ஜொலிக்க, வங்கதேசத்தை எளிதாக வீழ்த்தியது இந்தியா. இந்த இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்று பங்களாதேஷை பேட்டிங் செய்ய வைத்தது இந்தியா, மழை குறுக்கீட்டின் காரணமாக போட்டி தடை பெற்று வந்த நிலையில் நான்காம் நாள் ஆட்டம் முழுவதுமாக நடந்து முடிந்தது.
போட்டியை வென்றாக வேண்டும் என்ற முனைப்போடு இந்திய வீரர்கள் இருபது ஓவர் ஆட்டத்தில் விளையாடுவதைப் போல பேட்டிங்கில் அதிரடி காட்டினர். இந்திய அணி முன்னிலை பெற்று டிக்ளர் செய்ய தனது இரண்டாவது இன்னிங்ஸை தடுமாற்றத்துடன் தொடர்ந்தது வங்காளதேசம்.
ஐந்தாம் நாளான இன்று நூற்றி நாற்பத்தி ஆறு ரன்களை எடுத்து பத்து விக்கெட்டுகளையும் இழந்தது வங்கதேசம். தொன்னூற்றி ஐந்து ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடி வருகிறது இந்தியா.
நாலு ஓவர்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இருபத்தி ஒன்பது ரன்களை எடுத்து ரோஹித் சர்மாவின் விக்கெட்டினை பறிகொடுத்து விளையாடி வருகிறது இந்தியா. இந்த போட்டியில் வென்றாலும், டிராவில் முடிவடைந்தாலும் இந்திய அணி கோப்பையை தன் வசப்படுத்திக்கொள்ளும்.