திமுக செய்த ஊழல்களை அதிமுக ஆட்சியில் கண்டுகொள்ளவே இல்லை.. அதேபோல் கொடநாடு எஸ்டேட் உள்பட அதிமுக மீது திமுக எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை.. 2021-2026ல் அதிமுக பெரிய அளவில் திமுகவை எதிர்த்து ஒரு போராட்டம் கூட நடத்தவில்லை.. இன்று விஜய் அரசுக்கு எதிராக பேசும் ஈபிஎஸ், ஸ்டாலின் ஆட்சியில் ஏன் வாயை திறக்கவில்லை? அப்படியென்றால் இருவருக்கும் ஒரு அண்டர்ஸ்டாண்டிங் இருந்ததா? இந்த அண்டர்ஸ்டாண்டிங் தான் இரு கட்சிகளின் தோல்விக்கு காரணம்.. மக்களை இனிமேல் உங்கள் பழைய அரசியல் ஸ்ட்ராட்டஜியை வைத்து ஏமாத்த முடியாது..
தமிழக அரசியலில் கடந்த சில ஆண்டுகளாக அரங்கேறிவரும் மவுனக் கூட்டும், மறைமுக ஒப்பந்த அரசியலும் தற்போது பொதுமக்கள் மத்தியில் வெளிச்சம் போட்டுடைக்கப்பட்டு வருகிறது. திமுக ஆட்சியில் செய்த