india
மனைவியை கொன்று ஓடிப்போனதாக நாடகம் போட்ட கணவர்… மொட்ட கடுதாசியால் 15 வருடம் கழித்து வந்த மர்மம்…
15 வருடமாக கேரளாவை சேர்ந்த திருப்பெருந்துறை கிராம மக்களுக்கு ஒரு வயது குழந்தையை விட்டுவிட்டு ஒரு பெண் தன்னுடைய காதலருடன் ஓடிவிட்டதாக நினைத்த நிலையில் போலீசாரால் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டு இருக்கிறது.
30 வயதான கலா என்ற அப்பெண்ணை அவரின் கணவர் அனில் குமாரே கொன்று அவர்கள் வீட்டின் செப்டிக் டேங்கில் போட்டு மூடி மறைத்த விஷயம் தான் அது. இக்கொலை சம்மந்தப்பட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்து இருக்கும் நிலையில், இஸ்ரேல் நாட்டில் வேலை செய்து கொண்டிருக்கும் அனில் குமாரை இந்தியா அழைத்து வரவும் முயற்சி எடுக்கப்பட்டு இருக்கிறதாம்.
ஜினு கோபாலன், ஆர் சோமராஜன், ப்ரமோத் ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட நிலையில் அவர்கள் கூறிய சாட்சியங்களின் அடிப்படையில் செப்டிக் டேங்கில் இருந்து கலாவின் கொலை குறித்த தடயங்கள் சேகரிக்கப்பட்டு இருக்கிறது. ஆலப்புழா காவல் கண்காணிப்பாளர் சைத்ரா தெரசா ஜான் கூறும் போது, கலா 2008-09க்குள் காணாமல் போய் இருக்கிறார்.
ஆனால், இது எங்களுக்கு தனிப்பட்ட பிரச்னையால் ஏற்பட்ட கொலையாக இருக்குமோ என்ற சந்தேகம் இருந்தது. செப்டிக் டேங்கில் இருந்து எடுக்கப்பட்ட தடயங்கள் தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது.
15 வருடங்கள் கடந்து விட்ட நிலையில் இது காவல்துறைக்கு பெரிய சவாலான விஷயமாகி இருக்கிறது. கலா காணாமல் போனது குறித்து எந்த போலீஸ் புகாரும் இல்லை. திடீரென எங்களுக்கு பெயரில்லாத கடிதத்தில் இந்த கொலை குறித்த துப்பு கிடைத்தது. இப்போதைக்கு அந்த லெட்டர் குறித்து வேறு எதுவும் சொல்ல முடியாது எனவும் குறிப்பிட்டார்.
கலாவை குமாரும், கைது செய்யப்பட்ட அவர் உறவினர்களும் காரில் அழைத்து சென்று வலிய பெரும்புலா பாலத்தில் கொலை செய்துள்ளனர் எனக் கூறப்படுகிறது. குமாருக்கும், கலாவிற்கு 2007ம் ஆண்டு திருமணம் முடிந்தது. இருவரும் வேறு ஜாதியை சேர்ந்ததால் இரு குடும்பத்திலும் இத்திருமணத்திற்கு எதிர்ப்பு இருந்ததாம். திருமணம் முடிந்து சில மாதங்களில் அனில் வெளிநாட்டு வேலைக்கு சென்று விட்டார்.
கலா காணாமல் போன போது அவருக்கு ஒரு வயதில் இருந்த மகன் தற்போது 16 வயது வாலிபராக இருந்து இருக்கிறார். அனில் குமார் இரண்டாம் திருமணம் செய்துக்கொண்டுள்ளார். குமார் குடும்பத்தினரும், ஊர் மக்களும், கலா குடும்பத்தினை தூக்கி போட்டுவிட்டு யாருடனும் ஓடிப்போனதாகவே நினைத்தோம். இது பெரிய அதிர்ச்சியாகவே இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
Cricket
வாகை சூடப்போகிறதா?…வாங்கிக் கட்டப்போகுதா?வங்கதேசம்…ஆறாம் தேதி துவங்க உள்ளது அதிரடி…
இந்தியாவுடனான இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் கொண்ட போட்டி தொடர்களில் விளையாட இந்தியாவில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளது வங்கதேச ஆடவர் கிரிக்கெட் அணி. பாகிஸ்தானுடனான தொடரில் வெற்றி பெற்று, புத்துணர்வுடன் இந்தியாவிற்கு வந்தது அந்த அணி. ஆனால் டெஸ்ட் தொடரில் இந்தியர்களின் திறமைக்கு ஈடுகொடுக்க முடியாமல் பரிதாபமாக தோற்று தொடரை இழந்தது.
முதல் டெஸ்ட் போட்டியின் ஆரம்ப நாளில் மட்டுமே சீறிப்பாய்ந்தது அந்த அணி. அதன் பின்னர் ஓரு நாள் கூட இந்திய அணிக்கு இணையான ஆட்டத்தை அவர்களால் வெளிப்படுத்த முடியவில்லை. இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தோல்வியடைந்தது அந்த அணி.
ஆஸ்திரேலியா,தென்-ஆப்பிரிக்கா,நியூசிலாந்து,இலங்கை அணிகளுடன் டெஸ்ட் போட்டிகளில் ஒப்பிட்டுப் பார்த்தால் கத்துக்குட்டி அணியாகவே பார்க்கப்படுகிறது இந்த அணி. ஆனால் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் கதையே வேறுதான், இது சிறிது அபாயகரமான அணியாகவே பார்க்கப்படுகிறது.
இருபது ஓவர் போட்டிகளில் தங்களது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் முக்கிய வீரர்கள் இந்தியாவிற்கு எதிரான இருபது ஓவர் போட்டி தொடரில் விளையாட உள்ளனர்.
இதற்கு முன்னர் நடந்த போட்டிகளில் பல நேரங்களில் இந்திய அணிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதானல் டெஸ்ட் தொடரை விட இந்த இருபது ஓவர் போட்டி தொடர் விறுவிறுப்பானதாக இருக்கும் என்பதில் எந்த விதமான மாற்றுக் கருத்தும் இருந்து விடாது. ஆனால் இந்திய அணி இப்போது இருபது ஓவர் போட்டிகளின் உலக சாம்பியன் என்பதாலும், சொந்த மண்ணில் போட்டி நடைபெறுவதாலும் இம்முறை இது வங்கதேசத்திற்கு அதிகமான சவால்களை கொடுக்கும் என்பது ஒரு புறம் ஏற்புடைய ஒன்றாகவே இருக்கிறது.
இந்த இரு அணிகளுக்கு இடையேயான முதல் இருபது ஓவர் போட்டி ஆறாம் தேதி குவாலியரில் வைத்து நடைபெற உள்ளது. முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகள் டில்லி, ஹைதராபாத்தில் வைத்து நடைபெற உள்ளது.
india
மகாத்மா காந்தி பிறந்த நாள்…பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் மரியாதை…
இந்திய நாடு சுதந்திரம் அடைவதில் முக்கிய பங்கு வகித்தவர் காந்தியடிகள். இவரது தியாகத்தை நினைவு கூறும் விதமாக “மகாத்மா” என அழைக்கபடுகிறார். தேசப்பிதா காந்தியடிகளின் அஹிம்சை கொள்கையின் மூலமாக இந்திய நாடு பிரிட்டீஷ் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றது.
மகாத்மா காந்தியடிகளின் பிறந்த தினம் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. மகாத்மா காந்தியடிகளின் நினைவிடம் அமைந்துள்ள ராஜ்காட்டில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் அவருக்கு தங்களது மரியாதையை செலுத்தி வருகின்றனர். இன்று காலை முதலே அவரது நினைவிடம் அமைந்துள்ள ராஜ்காட்டிற்கு சென்று தலைவர்கள் பலரும் தங்களது மரியாதையை மலர் தூவி செய்து வருகின்றனர். நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர் தூவு மரியாதையை செலுத்தினார்.
டெல்லி முதல்வர் அதிஷி, மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா ஆகியோரும் மகாத்மாவின் நினைவிடத்தில் மலர் தூவி தங்களது மரியாதையை செலுத்தினர்.
தமிழக அரசின் சார்பில் சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் உள்ள காந்தியின் சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதன் அருகே மகாத்மாவின் உருவப்படமும் வைக்கப்பட்டிருந்தது. தமிழக முதல்வர் ஸ்டாலின் அங்கு சென்று காந்தியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் அப்போது உடனிருந்தார்.
சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் உள்ள மகாத்மாவின் உருவப்படத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார். மத்திய அமைச்சர் எல்.முருகனும் ஆளுநருடன் சென்று மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தினார்.
Cricket
ரேஸில் வென்ற ரோஹித் சர்மா!…சூப்பர் ஆக்கி காட்டுவாரா சூர்யா?…
இரண்டரை நாளில் வங்கதேசத்தை வென்று டெஸ்ட் போட்டிகளில் பிரம்மிக்கத் தக்க வெற்றியை பெற்றுள்ளது இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி. கான்பூரில் துவங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் போதிய வெளிச்சம் இல்லாததன் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது. இரண்டாவது மற்றும் மூன்றாவது நாள் ஆட்டம் முழுமையாக கைவிடப்பட்ட நிலையில் நான்காம், ஐந்தாம் நாட்களில் அசத்தலான ஆட்டத்தினை வெளிப்படுத்தியது இந்திய அணி.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்வதை உறுதிபடுத்துவதை மனதில் வைத்துக் கொண்டு இந்திய வீரர்கள் அதிரடியை காட்டினர். இருபது ஓவர் போட்டியின் அனுகுமுறையை டெஸ்ட் போட்டியில் காட்டினர் ரோஹித் சர்மா தலைமையிலான வீரர்கள்.
இலங்கை மண்ணில் ஒரு நாள் தொடரில் சமீபத்தில் அடி வாங்கி வந்த இந்திய அணி பங்களாதேஷை பதம் பார்த்தது தனது சொந்த மண்ணில்.
இந்த இரு அணிகளுக்கு இடையேயான மூன்று இருபது ஒவர் போட்டி தொடர் வருகிற ஆறாம் தேதி துவங்க உள்ளது.
முதல் போட்டி குவாலியரிலும், இரண்டாவது போட்டி ஒன்பதாம் தேதி டில்லியிலும், மூன்றாவது போட்டி ஹைதராபாத்தில் பன்னிரரெண்டாம் தேதியும் நடைபெற உள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையில் அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், ஹார்திக் பாண்டியா, ரியான் பராக், நிதிஸ் குமார் ரெட்டி, சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ரவிபிஷ்னய், வருன் சக்கரவர்த்தி, ஜித்தேஷ் சர்மா, அர்ஷ்தீப் சிங், ஹர்சித் ரானா, மயங்க்யாதவ் ஆகியோர் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் நடைபெற்ற இருபது ஓவர் தொடரை கைப்பற்றியது போல வங்கதேசத்தையும் வென்று காட்டுவாரா? கேப்டன் சூர்ய குமார் யாதவ் என்ற எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது. இருபது ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பையை இந்திய அணி கைப்பற்றிய பிறகு இந்திய மண்ணில் வைத்து நடைபெற உள்ள முதல் தொடர் இதுவே என்பதனாலும் இந்த தொடர் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது.
Cricket
டெஸ்ட் கிரிக்கெட்…இலக்கு எளியது….கோப்பை இந்தியாவுக்கு?…
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது வங்கதேச கிரிக்கெட் அணி. மூன்று இருபது ஓவர் போட்டி தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரினல் விளையாட இந்தியாவிற்கு வந்துள்ள வங்கதேச அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் வைத்து நடந்த இந்தப் போட்டியில் அசாத்திய திறமையை வெளிப்படுத்திய இந்திய அணி அசத்தலான வெற்றியை பெற்றது. இந்திய அணியின் ஆல்-ரவுண்டர்களான அஷ்வின் – ஜடேஜா இணை பேட்டிங் மற்றும் பவுலிங்கில் ஜொலிக்க, வங்கதேசத்தை எளிதாக வீழ்த்தியது இந்தியா. இந்த இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்று பங்களாதேஷை பேட்டிங் செய்ய வைத்தது இந்தியா, மழை குறுக்கீட்டின் காரணமாக போட்டி தடை பெற்று வந்த நிலையில் நான்காம் நாள் ஆட்டம் முழுவதுமாக நடந்து முடிந்தது.
போட்டியை வென்றாக வேண்டும் என்ற முனைப்போடு இந்திய வீரர்கள் இருபது ஓவர் ஆட்டத்தில் விளையாடுவதைப் போல பேட்டிங்கில் அதிரடி காட்டினர். இந்திய அணி முன்னிலை பெற்று டிக்ளர் செய்ய தனது இரண்டாவது இன்னிங்ஸை தடுமாற்றத்துடன் தொடர்ந்தது வங்காளதேசம்.
ஐந்தாம் நாளான இன்று நூற்றி நாற்பத்தி ஆறு ரன்களை எடுத்து பத்து விக்கெட்டுகளையும் இழந்தது வங்கதேசம். தொன்னூற்றி ஐந்து ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடி வருகிறது இந்தியா.
நாலு ஓவர்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இருபத்தி ஒன்பது ரன்களை எடுத்து ரோஹித் சர்மாவின் விக்கெட்டினை பறிகொடுத்து விளையாடி வருகிறது இந்தியா. இந்த போட்டியில் வென்றாலும், டிராவில் முடிவடைந்தாலும் இந்திய அணி கோப்பையை தன் வசப்படுத்திக்கொள்ளும்.
Cricket
வாஷ்-அவுட் தானா ப்ளான்?…அட்டாக் மூடில் இந்திய அணி…
இந்திய – வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நடந்து வருகிறது. மழை குறுக்கீடு, போதிய வெளிச்சமின்மை காரணங்களால் போட்டி தொடர்ந்து நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. முதல் நாள் ஆட்டம் பாதியில் நின்ற நிலையில் இரண்டாவது மற்றும் மூன்றாவது நாள் ஆட்டங்கள் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. நான்காம் நாள் ஆட்டம் தடை ஏதுமின்றி இன்று முழுமையாக நடந்து முடிந்தது.
நூற்றி ஏழு ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகள் என்ற நிலையில் இருந்த வங்கதேசம் தனது பேட்டிங்கை தொடர்ந்தது. இந்திய அணியின் அபாரமான பந்து வீச்சினை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்து வெளியேறினர் பங்களாதேஷ் அணியினர்.
இருநூற்றி முப்பத்து மூன்று ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தனது முதல் இன்னிங்ஸை நிறைவு செய்தது அந்த அணி. தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் டுவண்டி – டுவண்டி போட்டியில் வளையாடுவதைப் போல அதிரடியாக ஆடினர்.
முப்பத்தி நான்கு புள்ளி நான்கு ஓவர்களில் இரு நூற்றி என்பத்தி ஐந்து ரன்கள் எடுத்தது இந்திய அணி. ஒன்பது விக்கெட்டுகளை இழந்திருந்த நேரத்தில் முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. துவக்க வீரர் ஜெய்ஷ்வால் அதிரடியாக ஆடி எழுபத்தி இரண்டு ரன்களை குவித்தார். ராகுல் அறுபத்தி எட்டு ரன்களும், விராட் கோலி நாற்பத்தி ஏழு ரன்களும் எடுத்தனர்.
தனது இரண்டாவது இன்னிங்ஸை துவக்கிய வங்கதேச அணி இருபத்தி ஆறு ரன்களை எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. நாளை ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் போட்டியை டிராவாக்க வங்கதேச அணி கடுமையான போராட்டத்தை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இருபத்தி ஆறு ரன்கள் முன்னிலை பெற்றுள்ள நேரத்தில் போட்டியை வென்று வங்கதேச அணியை வாஷ்-அவுட் செய்யும் முனைப்பினை இந்திய அணி காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
Cricket1 day ago
டோனி விளையாட நினைக்கும் வரை ரூல்ஸ் மாறிட்டே இருக்கும்.. முகமது கைஃப்
-
latest news1 day ago
ஓட்டுநர் உரிமத்தில் மாற்றங்கள்.. ஆன்லைனிலேயே செய்யலாம்..
-
Cricket10 hours ago
INDvsBAN முதல் டி20-க்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்.. தயார் நிலையில் 2500 காவலர்கள்
-
Cricket9 hours ago
WT20 உலகக் கோப்பை: முதல் ஓவரிலேயே முகத்தில் காயம்.. வந்த வேகத்தில் வெளியேறிய வீராங்கனை
-
Cricket8 hours ago
WT20 உலகக் கோப்பை: Dead Ball பஞ்சாயத்து.. ICC ரூல்ஸ் என்ன சொல்லுது தெரியுமா?
-
latest news3 hours ago
இந்த நாலு மாவட்டத்துக்கு கன மழை…வானிலை ஆய்வு மையம் கொடுத்துள்ள எச்சரிக்கை…
-
latest news1 day ago
2026ல் பாஜக ஆட்சி…திமுகவின் ஊழல்கள் வெளிவரும்…எச்.ராஜா உறுதி…
-
latest news1 day ago
போஸ் கொடுத்த திருடன்…காட்டிக் கொடுத்த கேமரா…