மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்கபாத் பகுதியில் வசித்து வருபவர் சூரஜ் சஞ்சவ். இவரின் தோழில் ஸ்வேதா தீபக். இவர்கள் இரண்டு பேரும் நேற்று மதியம் சுலிபஞ்சன் மலை பகுதிக்கு சென்றனர். அங்கு சிறிது நேரம் பொழுதை கழித்த பின், தனக்கு கார் ஓட்ட சொல்லி கொடுக்குமாறு சூரஜிடம் ஸ்வேதா கேட்டிருக்கிறார்.
சூரஜும் அவருக்கு கார் ஓட்ட சொல்லி கொடுத்திருக்கிறார். அதன்பின் நான் தனியாக ஓட்டுகிறேன் என ஸ்வேதா கூறியுள்ளார். எனவே, காரில் இருந்து இறங்கிய சூரஜ் ஸ்வேதா கார் ஓட்டுவதை செல்போனில் வீடியோ எடுக்க துவங்கினார். ஓரளவுக்கு ஓட்டிய ஸ்வேதா. ரிவஸ் கீரில் பயிற்சி செய்ய நினைத்தார்.
எனவே, மெதுவாக ரிவர்ஸ் கியரில் ஓட்ட துவங்கினார். காரும் பின்னால் போனது. அப்போது ஸ்வேதா கிளட்சி மிதித்து வண்டியை நகர்த்துவதற்கு பதில் ஆக்சிலேட்டரை மிதித்தார். இதனால், வண்டி வேகமான பின்னால் சென்று 300 அடி பள்ளத்தில் கீழே விழுந்தது. இதில், ஸ்வேதா மரணமடைந்தார். காரும் நொருங்கிபோனது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
பின்னால் 300 அடி பள்ளம் இருக்கும் நிலையில், ஸ்வேதா அங்கு கார் ஓட்ட பயிற்சி எடுத்ததே தவறு. அதுவும் ரிவர்ஸ் கியரில் காரை ஓட்ட முயற்சி செய்தது பெரும் தவறு என பலரும் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
https://x.com/SparkMedia_TN/status/1802946551737651246