பெட்ரோல், டீசல் மட்டுமில்லை!.. குடிநீர் கட்டணமும் உயர்கிறது!.. பொதுமக்கள் அதிர்ச்சி..

பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அவ்வப்போது அதிகரிப்பதுண்டு. பாராளுமன்ற தேர்தல் காரணமாக சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை ஏற்றப்படவில்லை. ஆனால், இப்போது மக்கள் பயன்படுத்தும் குடிநீரின் விலை அதிகரிக்கவுள்ளது.

பெங்களூரில் பெட்ரோல், டீசல் விலை கடந்த 15ம் தேதி மீண்டும் உயர்த்தபப்ட்டது. குடிநீர் கட்டணம் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு உயர்த்தப்பட்டது. கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. சில திட்டங்களால் கர்நாடக அரசு நிதிச்சுமையில் சிக்கி தவிப்பதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறது.

இதைத்தொடர்ந்தே பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 3 உயர்த்தப்பட்டது. தற்போது மக்கள் பயன்படுத்தும் குடிநீரின் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக கர்நாடக அரசு, பெங்களூர் குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்துடன் ஆலோசனை செய்தது. இதைத்தொடர்ந்து குடிநீர் கட்டணத்தை உயர்த்த கர்நாடக அரசு திட்டமிட்டிருக்கிறது.

இது தொடர்பாக விளக்கமளித்த துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் ‘கடந்த 10 வருடங்களாக குடிநீர் கட்டணம் உயர்த்தப்படவில்லை. இதனால் குடிநீர் வாரியத்திற்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. எந்த வங்கியும் குடிநீர் வாரியத்திற்கு நிதியளிக்க முன்வருவதில்லை. எனவே, இழப்பை ஈடுகட்ட மாதாந்திர குடிநீர் கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டிருக்கிறோம்’ என கூறினார

Leave a Comment