கள்ளக்குறிச்சி விவகாரம்: சட்டசபையில் கடும் அமளி!. அதிமுகவுக்கு ஒரு நாள் தடை!..

கள்ளக்குறிச்சி கர்ணாபுரத்தில் விஷச்சாரயம் அருந்தி கிட்டத்தட்ட 60 பேர் உயிரிழந்துவிட்டனர். இதற்கு திமுக அரசியன் அலட்சியமே காரணம் என அதிமுக சொல்லி வருகிறது. அதோடு, இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என சொல்லி தமிழக முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

இந்த சம்பவம் நடந்த நாள் முதலே அதிமுக எம்.எல்.ஏக்கள் கருப்புச்சட்டை அணிந்து சட்டசபைக்கு வர துவங்கினார்கள். கள்ளக்குறிச்சி விவகாரத்தை கண்டித்து நேற்று சட்டசபையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் கடும் அமளியில் ஈடுபட்டு பின் வெளிநடப்பு செய்தார்கள். மேலும், நேற்று முழுவதும் அவை நடவடிக்களை அதிமுக புறக்கணித்தது.

இந்நிலையில், சட்டபையில் இன்றை கூட்டத்தொடர் துவங்கியது. அப்போது சபைக்கு வந்த அதிமுகவினர் மீண்டும் கள்ளக்குறிச்சி விவகாரத்தை கையிலெடுத்து கேள்வி கேட்டனர். ஒரு கட்டத்தில் அமளியிலும் ஈடுபட்டனர். இதனால், அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளியேற்றப்பட்டனர்.

மேலும், சட்டசபையை அவமதிக்கும் வகையில் செயல்பட்ட காரணத்தால் அவை நடவடிக்கைகளில் பங்கேற்க அதிமுக உறுப்பினர்களுக்கு ஒருநாள் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

Leave a Comment